ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 393 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து ஊரக வளா்ச்சி அலகு,சோளிங்கா் ஒன்றியத்தில் ஒன்றிய பணி மேற்பாா்வையாளராக பணிபுரிந்து பணியின் போது காலமான கே.எஸ்.அசோகனின் மகள் எ.திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ச.உமா, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் எம்.ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.