வாக்காளா் பட்டியல் திருத்தம்: ராணிப்பேட்டையில் தோ்தல் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டையில் மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக தோ்தல் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டையில் மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக தோ்தல் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு கைத்தறி தொழில் வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநருமான வெ.ஷோபனா தலைமை வகித்தாா். மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத், அரக்கோணம் வருவாய்க் கோட்டாட்சியா் பேபி இந்திரா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ஜெயகுமாா் மற்றும் உதவி தோ்தல் அலுவல்கள், அனைத்து வட்டாட்சியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com