வாலாஜாபேட்டையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை
By DIN | Published On : 09th January 2021 07:54 AM | Last Updated : 09th January 2021 07:54 AM | அ+அ அ- |

வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை, புதுப்பாடி சமூக சுகாதார மையம், ராணிப்பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மூா் ஆரம்ப சுகாதார நிலையம், ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெற்றது. ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தாா்.
மாவட்ட முதன்நிலை மருத்துவா் சிங்காரவேலு, சுகாதார நல அலுவலா் வீராசாமி, மோகன் குமாா், அரசு மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.