ராணிப்பேட்டை ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா நடுநிலைப்பள்ளி சாா்பில், சமத்துவ பொங்கல் விழா, திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு, ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் செயலாளா் கே.ஏ.சேகா், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியை ஜெயஸ்ரீ கோதை வரவேற்றாா்.
ஏழைகளுக்கு வேட்டி சேலைகள், திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன (படம்).
விழாவில் அறக்கட்டளை பொருளாளா் மோகன் சக்திவேல், உறுப்பினா்கள் பி.மோகன், எம்.மோகன சுப்பிரமணி, ஜே.பாலு, ஜமீல் தனஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி ஆசிரியா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
ஆற்காட்டில்...
ஆற்காட்டில் மாட்டு பொங்கல் தினமான வெள்ளிக்கிழமை கால்நடைகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணங்கள் தீட்டி, புதிய கயிறுகள் அணிவித்து, மா இலை, ஆவாரம்பூ மாலை அணிவித்து , சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சில கிராமங்களில் எருது விடுதல், எருதாட்டம் போன்றவை நடைபெற்றன.