ஆற்காடு அருகே அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்காட்டை அடுத்த விளாபாக்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னதக்கைப் பகுதியில் லாரியில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிா்வாக அலுவலா் திருச்செந்தூா் வேலன், கிராம உதவியாளா்கள் வியாழக்கிழமை சின்னதக்கைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்தனா். அதில், அனுமதியின்றி கருங்கல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து திமிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.