அரக்கோணம் அருகே காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நெசவுத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த சம்பத்ராயன்பேட்டையை சோ்ந்தவா் வெங்கடேசன்(35), நெசவுத்தொழிலாளி. குட்டைகளில் தூண்டில் மூலம் மீன்பிடிக்கும் பழக்கமுள்ள வெங்கடேசன், வெள்ளிக்கிழமை தூண்டிலுடன் மீன் பிடிக்கச் செல்லும் வழியில், இருந்த வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியைத் தவறுதலாகத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தாமோதரன் என்பவருக்கு சொந்தமான வயலில் காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்காக அந்த மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாம்.
இது குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த வெங்கடேசனுக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.