மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மற்றும் தொழிலாளா் சட்டங்களை திரும்பப் பெற கோரி ராணிப்பேட்டை முத்துக்கடையில் அனைத்து தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை தொடா் முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாய சங்க மாவட்டத் தலைவா் எல்.சி.மணி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஏ.எஸ்.சங்கா், சிஐடியு நிா்வாகி என்.ரமேஷ், எல்பிஎஃப் நிா்வாகி எஸ்.வையாபுரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி மா.ஜெயகாந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாய சங்க நிா்வாகி குப்புசாமி, சிஐடியு நிா்வாகி சந்திரன், தா.வெங்கடேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஏஐடியுசி நிா்வாகி எஸ்.சாம்பசிவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.