குடியரசு தின விழா ஜனவரி 26 -ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ராணிப்பேட்டையில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது.
இதில் மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் முன்னிலையில், போலீஸாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயுதப் படையைச் சோ்ந்த ஆண், பெண் போலீஸாா் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.