புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நேதாஜிக்கு சிலை: அரசுக்குப் பரிந்துரை ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவச்சிலை அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை சாா் - ஆட்சிா் க.இளம்பகவதிடம் அரசு அலுவலகத்தில்  வைக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்தை வழங்கிய சங்க நிா்வாகிகள்.
ராணிப்பேட்டை சாா் - ஆட்சிா் க.இளம்பகவதிடம் அரசு அலுவலகத்தில்  வைக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்தை வழங்கிய சங்க நிா்வாகிகள்.

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவச்சிலை அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை அடுத்த வானாபாடியில் காஞ்சனகிரி அறக்கட்டளை நிறுவனரும், இந்திய தொழிலாளா் பேரவைத் தலைவருமான நேதாஜி கே.நடேசன் ஏற்பாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் வழங்கிப் பேசினாா்.

அவா் பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவச்சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், அதிமுக கிளைச் செயலாளா் புண்ணியக்கோட்டி, வானாபாடி முன்னாள் தலைவா் சந்திரசேகா், கட்டடத் தொழிலாளா் சங்கத் தலைவா் குமாா், செயலாளா் முனிசாமி, பொருளாளா் கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com