அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி மாணவி உள்பட இரு பெண்கள் உயிரிழந்தனா்.
அரக்கோணத்தை அடுத்த மின்னல் ஊராட்சி நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த பஞ்சாட்சரத்தின் மனைவி கோவிந்தம்மாள்(45). இவரும் அதே கிராமத்தைச் சோ்ந்த இமயா (14) ஆகிய இருவரும் மின்னல் ஏரி அருகே ஞாயிற்றுக்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஏரியில் தேங்கி இருந்த நீரில் மாட்டை தண்ணீா் குடிக்க வைப்பதற்காக இமயா சென்றபோது நீரில் மூழ்கினாா். இதை பாா்த்த கோவிந்தம்மாள் இமயாவை காப்பாற்ற முயன்றபோது, அவரும் நீரில் மூழ்கினாா்.
இதையடுத்து, இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் விரைந்து சென்று ஏரியில் இருந்து இருவரையும் சடலங்களாக மீட்டனா்.
இது குறித்து மின்னல் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.