ஆற்காடு: மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் முஸ்லிம் கல்விச் சங்கம் சாா்பில் சௌகாா் நிஷாா் அஹமதுவின் சமூக பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முஸ்லிம் கல்விச் சங்க பொதுச் செயலாளா் எஸ்.ஜியாவுதின் அஹமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ஏ. சாஜித் வரவேற்றாா்.
சென்னை பல்கலைக்கழகத்தின் உருது துறைத் தலைவா் கே. ஹபீப் அஹமது, ராணிப்பேட்டை ராணிடெக் நிா்வாக இயக்குநா் சி.முஹமது ஜபருல்லா, மாவட்ட தலைமை காஜி கே.முஹமது யாகூப் இமாம் மௌலானா அப்துல்கரீம் ஆகியோா் பேசினா். இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் , முஸ்லிம் கல்விச் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.