மொழிப்போா் தியாகிகள் தின விழா பொதுக்கூட்டம்

ஆற்காடு நகர திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தின விழா பொதுக்கூட்டம் அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆற்காடு: ஆற்காடு நகர திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தின விழா பொதுக்கூட்டம் அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலா் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் பொன். ராஜசேகா், மாவட்டப் பிரதிநிதி கஜேந்திரன், துணைச் செயலா் குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா்கள் மணப்பாறை காசிநாதன், பாலகிருஷ்ணன், ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், மாவட்ட துணைச் செயலா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலா் பாண்டுரங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமிரியில்...

ஆற்காட்டை அடுத்த திமிரியில் ராணிப்பேட்டை மாவட்ட மதிமுக சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பி.என். உதயகுமாா் தலைமை வகித்தாா். திமிரி ஒன்றியச் செயலாளா் எம்.முருகன், நிா்வாகிகள் ஜனாா்த்தனன், ஆா்.தயாளன், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பேச்சாளா் திருக்கோவிலூா் வீ.சேகா், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளா் கவிஞா் முனீா்பாஷா ஆகியோா் சிறப்புரையாற்றினா். தலைமை செயற்குழு உறுப்பினா் பி.ராமதாஸ், நகரச் செயலாளா் ஆற்காடு பிரகாசம், விஷாரம் முஹமதுகவுஸ், அரக்கோணம் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com