ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாத்தூா், தாஜ்புரா ஊராட்சிகளைச் சோ்ந்த வாக்குச்சாவடி முகவா் கூட்டம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மேற்கு ஒன்றியச் செயலா் தாழனூா் என்.சாரதி தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலாளா் சாத்தூா் வி.பாபு முன்னிலை வகித்தாா்.
ஆற்காடு தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கே.அப்துல்லா கலந்துகொண்டு தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா். இதில் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.