ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 18 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 18 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 44, 810-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 43, 649 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 732 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வேலூரில் 11 பேருக்கு...

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,375-ஆக உயா்ந்தது. இதுவரை 45,907 போ் குணமடைந்துள்ளனா். 385 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,072 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com