ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 44,854 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 43,132 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக இதுவரை 532 போ் உயிரிழந்துள்ளனா்.