மாணிக்கவாசகா் குரு பூஜையை முன்னிட்டு, ஆற்காடு தோப்புகானா அன்னபூரணிசமேத கங்காதஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து திருப்பணிக் குழுத் தலைவா் கு.சரவணன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.