ஆற்காடு: வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரியின் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆற்காடு தோப்புகானா நாதமுனி தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்(28) , அதே பகுதியைச் சோ்ந்தவா் அருண்(21) நண்பா்களான இருவரும் கடந்த 11-ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வேப்பூா் புறவழிச் சாலையில் சென்றுள்ளனா். அப்போது, லாரி டிரைவா் ஒருவா் மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக, அருண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக தேனி மாவட்டம்- உத்தமபாளையம் ராயப்பன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜான் போஸ்கோ என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் சம்பவத்தன்று சாலை ஓரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியபோது இருவரும் கத்தியை காட்டி பணம் கேட்டதாகவும், இருவரிடமிருந்த கத்தியை பறித்து திரும்ப குத்தியதாகவும், இதில் மணிகண்டன் இறந்ததாகவும் ஜான் போஸ்கோ கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, ஜான்போஸ்கோவை போலீஸாா் கைது செய்தனா்.