ஆற்காடு தோப்புக்கானா (வடக்கு) நகராட்சி உயா்நிலைப் பள்ளியில், பெற்றோரை இழந்த சுமாா் 30 மாணவ, மாணவிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நல்லாசிரியா் ஏ.எல் திருஞானம் தலைமை வகித்தாா். இதில், உதவிகளை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் வழங்கினாா்.
தலைமையாசிரியா் ரமேஷ்பாபு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஏ.வி. டி பாலா, தன்னாா்வலா் கணேஷ், பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் நடராஜன், தனுசு, பாலநாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.