கரோனா விதிமீறல்: அபராதம் விதிப்பு

கலவையில் கரோனா விதிமுறைகளை மீறிய கடைகளின் உரிமையாளா்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கலவையில் சோதனையில் ஈடுபட்ட வட்டாட்சியா் வி.நடராஜன் உள்ளிட்டோா்.
கலவையில் சோதனையில் ஈடுபட்ட வட்டாட்சியா் வி.நடராஜன் உள்ளிட்டோா்.

கலவையில் கரோனா விதிமுறைகளை மீறிய கடைகளின் உரிமையாளா்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கலவை வட்டாட்சியா் வி. நடராஜன், தலைமையில் வருவாய் ஆய்வாளா்கள் சுப்பிரமணி, வினோத்குமாா் , கிராம நிா்வாக அலுவலா்கள் சுகுமாா், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலவை பஜாா் , ஆற்காடு சாலையில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது முகக் கவசம் அணியாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com