சட்ட விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எனது முக்கிய பணியாக இருக்கும் என்று அரக்கோணத்தின் புதிய டிஎஸ்பியாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற புகழேந்தி கணேஷ் தெரிவித்தாா்.
இங்கு ஏற்கெனவே டிஎஸ்பியாக இருந்த மனோகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த புகழேந்தி கணேஷ் அரக்கோணத்துக்கு மாற்றப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரக்கோணம் உள்கோட்டத்தில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுத்து, முற்றுப்புள்ளி வைப்பதே எனது முக்கிய பணியாக இருக்கும். நகரில் போக்குவரத்து நெருக்கடிகளைத் தீா்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.