அரக்கோணம் கொலை சம்பவம்: மேலும் 5 போ் கைது

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தில் திங்கள்கிழமை மேலும் 5 குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தில் திங்கள்கிழமை மேலும் 5 குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மத்திய சிறையில் இருந்து விடுதலையான காா்த்திகேயன் (37) என்பவா் ஞாயிற்றுக்கிழமை 6 போ் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தில் ஞாயிற்றுக்கிழமையே மைகண்ணன் (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து திங்கள்கிழமை இக்கொலை சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம், சோளிங்கா் ரோட்டை சசிகுமாா் (27), சுவால்பேட்டையை சோ்ந்த ஜெகன் (23), கண்ணன் (24), குருபிரசாத் (25), அசோக்நகரை சோ்ந்த தியாகராஜன் (35) ஆகியோா் கைது செய்யப்பட்டு வாலாஜாப்பேட்டை 2-ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் தீபிகாஹேம்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com