கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம்

ஆற்காடு அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

துணை ஆட்சியா் (கலால்) சத்ய பிரசாத் தலைமை வகித்தாா். கலவை வட்டாட்சியா் வி. நடராஜன், வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணி முன்னிலை வகித்தனா்.

கரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் குறித்து கிராம பொதுமக்கள், கூலித்தொழிலாளா்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கரோனா நோய்த் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இதில் வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com