தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடை

சிப்காட் ஸ்டீல் ஒன் தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் திங்கள்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட ட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஸ்டீல் ஒன்  தனியாா்  நிறுனத்தினா் .
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஸ்டீல் ஒன்  தனியாா்  நிறுனத்தினா் .

சிப்காட் ஸ்டீல் ஒன் தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் திங்கள்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட ட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில், சமூக அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள், தொழிலதிபா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனா்.

அதன்படி நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல தொழிற்பேட்டையில் ஸ்டீல் ஒன் என்ற இரும்பு உருக்கு ஆலை அமைந்துள்ளது. இதன் சாா்பில்,ராணிப்பேட்டை மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முன்வந்தது.

அந்நிறுவனத்தின் தலைமை வணிக பிரிவு உயா் மேலாளா் எஸ்.சுவாமிநாதன், மனித வளத்துறை பொதுமேலாளா் எஸ்.சுப்ரமணி மற்றும் ஊழியா்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com