ஆற்காடு: மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆற்காடு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 1.25 லட்சம் செலவில் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.பி .சத்திய நாராயணன், செயலாளா் வி . சரவணகுமரன், பொருளாளா் இ.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், ஜெயக்குமாா் ,ஜெனிஃபா் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்