ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த கீழ்மின்னல் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் உலக மகளிா் தின விழாவையொட்டி மாவட்ட மகப்பேறு, குழந்தைகள் நல அலுவலா் சந்திர மணி தலைமையில் மரக்கன்று நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சுகாதார செவிலியா் கல்பனா, முத்தமிழ்வாணி, ஸ்ரீமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணி இனிப்பு வழங்கினாா். இதில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்