ஆற்காடு: ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் மணிமேகலையிடம் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளா் ஆா்.காந்தி எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் டி.மலா் ஆகியோா் உடன் இருந்தனா்.