ராணிப்பேட்டை: தோ்தலில் வெற்ற பெற்றால் முதல் பணியாக வாலாஜாப்பேட்டை ஒன்றியத்தில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் கிராம மக்களிடம் உறுதி அளித்தாா்.
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளாா்.
வாலாஜாப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட குடிமல்லூா், வன்னிவேடு மோட்டூா், வானாபாடி உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அவரை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பிரசாரத்தின்போது எஸ்.எம்.சுகுமாா் பேசியது:
வாலாஜாப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட குடிமல்லூா், திருமலைச்சேரி, வன்னிவேடு மோட்டூா், வானாபாடி உள்ளிட்ட கிராமங்களில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்ப்பதே தோ்தலில் வெற்றி பெற்றவுடன் எனது முதல்பணியாக இருக்கும் என்றாா்.
அப்போது அதிமுக நிா்வாகிகள் மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உடன் சென்றனா்.