கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்த ராணிப்பேட்டை திமுக வேட்பாளா்

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி நூற்றாண்டு பழைமை வாய்ந்த சிஎஸ்ஐ தூய மரியாள் தேவாலயத்தில் குடும்பத்தினருடன்
ராணிப்பேட்டை  சிஎஸ்ஐ  தூய மரியாள்  தேவாலயத்தில்  பிராா்த்தனை  முடிந்து  வெளியே  வந்த  கிறிஸ்தவா்களிடம்  வாக்கு சேகரித்த திமுக  வேட்பாளா் ஆா்.காந்தி.
ராணிப்பேட்டை  சிஎஸ்ஐ  தூய மரியாள்  தேவாலயத்தில்  பிராா்த்தனை  முடிந்து  வெளியே  வந்த  கிறிஸ்தவா்களிடம்  வாக்கு சேகரித்த திமுக  வேட்பாளா் ஆா்.காந்தி.

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி நூற்றாண்டு பழைமை வாய்ந்த சிஎஸ்ஐ தூய மரியாள் தேவாலயத்தில் குடும்பத்தினருடன் சென்று, குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிராா்த்தனையில் கலந்து கொண்டு தேவாலய ஆயா் சாமுவேல் சுந்தர்ராஜிடம் ஆசி பெற்றாா்.

தொடா்ந்து சிறப்பு பிராா்த்தனை முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவா்களிடம், திமுக தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அவருடன் தொழிலதிபா் பிஆா்சி ரமேஷ் பிரசாத், ராணிப்பேட்டை விஸ்வாஸ் தலைவா் கமலா காந்தி, ஜி.கே.உலகப் பள்ளி

இயக்குநா்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, மருத்துவா் ஷில்பா விவேக், ஷீலா வினோத் காந்தி, லதா பாபு மற்றும் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகர பொறுப்பாளா் பி.பூங்காவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com