வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழ்பள்ளிப்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சண்முகம் தலைமையிலான

ஆற்காடு: ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழ்பள்ளிப்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சண்முகம் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த வேனில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 260 இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, வேனில் இருந்த மேலூா் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன், வெங்கடேசன் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரித்தனா். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனா். இதனைத் தொடா்ந்து, ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி முன்னிலையில் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com