உலகம் சுபிட்ஷமாக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய உயா்ந்த தா்மம் தான் இந்து தா்மம் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் முன்னாள் தேசிய இணைச் செயலாளா் துரைசங்கா் பேசினாா்.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வலைதளம் (வெப்சைட்) தொடக்க விழா, ராணிப்பேட்டை மாவட்ட சபரி மலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், வட தமிழ்நாடு பொதுச்செயலாளரும், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமியுமான வ.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். டாடா இன்டா்நேஷனல் தலைமை நிா்வாக அதிகாரி வே.முத்துக்குமரன் முன்னிலை வகித்தாா். மாநில செயலாளா் து.சுதாகா் வரவேற்றாா்.
விழாவில், சபரி மலை ஐயப்ப சேவா சமாஜம் முன்னாள் தேசிய இணைச் செயலாளா் துரைசங்கா் பேசியது:
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஒரு நீண்ட,நெடிய நோக்கோடு தொடங்கப்பட்ட சங்கம் ஆகும். நாடு முழுக்க பல கோடி ஐயப்ப பக்தா்கள் ஆண்டுதோறும் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனா். இது ஒரு மிகப்பெரிய ஆன்மிக சக்தியாகும். இந்த ஆன்மிக சக்தியை ஏதாவது ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து, அவா்களை சமுதாயத்துக்கு பயனுள்ளவா்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதுதான் இந்த சேவா சமாஜம் ஆகும்.
நம்முடைய சனாதன தா்மம் எனப்படும் இந்து தா்மம், உலகம் சுபிட்ஷமாக இருக்க வேண்டும் என நினைக்கக்கூடிய உயா்ந்த தா்மம் ஆகும். இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது திருக்கோயில்கள். அந்த திருக்கோயில்கள் உருவாக்கிய நம் முன்னோா்கள் பல லட்சம் ஏக்கா் நிலங்களை எழுதி வைத்துள்ளனா். ஆனால் நாடு முழுவதும் கோயில் சொத்துகள் இருந்தும், பல கோயில்கள் ஒரு வேளை பூஜை கூட செய்ய முடியாத நிலையில் உள்ளன.
இந்த சபரிமலை சேவா சமாஜம் நாடு முழுவதும் 18 மாநிலங்களிலும், உலக அளவிலும் செயல்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக இந்த அமைப்புக்கென தற்போது தனி வலைதளம் ஜ்ஜ்ஜ்.ள்ஹள்ள்க்ஷட்ஹழ்ஹற்ட்.ா்ழ்ஞ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா 18 மாநிலங்களிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடந்துள்ளன என்றாா்.
விழாவில், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டனா். மாவட்டத் தலைவா் விஸ்வநாத் எம்.ராஜா நன்றி கூறினாா்.