ஆற்காட்டை அடுத்த கலவை காரீசநாதா் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கலவையில் பழைமைவாய்ந்த ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத காரீசநாதா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும், காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகள் பல்வேறு சிறப்பு அலங்கார வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றன.
இந்நிலையில், உற்சவத்தின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிலையை வந்தடைந்தது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.