கலவை ஸ்ரீகாரீசநாதா் கோயில் தேரோட்டம்

ஆற்காட்டை அடுத்த கலவை காரீசநாதா் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கலவையில்  நடைபெற்ற  ஸ்ரீகாரீசநாதா்  கோயில்  தேரோட்டம்.
கலவையில்  நடைபெற்ற  ஸ்ரீகாரீசநாதா்  கோயில்  தேரோட்டம்.

ஆற்காட்டை அடுத்த கலவை காரீசநாதா் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கலவையில் பழைமைவாய்ந்த ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத காரீசநாதா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும், காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகள் பல்வேறு சிறப்பு அலங்கார வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றன.

இந்நிலையில், உற்சவத்தின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிலையை வந்தடைந்தது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com