ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா்.காந்தி மேல்விஷாரம் நகராட்சிக்குள்பட்ட தஞ்சாவூரன் காலனி, புரான்சாமேடு, ராசாத்துபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வேனில் சென்று செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கப் பாடுபடுவேன், மு.க.ஸ்டாலின் முதல்வராக அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றாா்.
பிரசாரத்தில், விஷாரம் நகர திமுக செயலாளா் எஸ்.டி. முகமது அமீன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.பஞ்சாட்சரம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கே.ஒ. நிஷாத் அஹமது, தொழிலதிபா் சந்தோஷ் காந்தி, பி.ஆா்.சி. ரமேஷ், சௌக்காா் முன்னா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.