ராணிப்பேட்டைவாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து திமுக வேட்பாளா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம் (தனி) ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து திமுக வேட்பாளா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அவருடன் மாவட்ட அவைத் தலைவா் அ.அசோகன், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே. சுந்தரமூா்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்டவழக்குரைஞரணி அமைப்பாளா் ஏ.எம்.சங்கா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் கே.ஜி.முரளி, நகர துணைச் செயலாளா் ஏா்டெல் டி. குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.