ஆற்காட்டை அடுத்த கலவை பேரூராட்சியில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியை முன்னிட்டு பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயலாளா் நடராஜன் தலைமை வகித்தாா். தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவா் பிரசன்னாதேவி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினாா்.