ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத அரசு டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், நகைக்கடை உள்ளிட்டவற்றுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
ராணிப்பேட்டை நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி தலைமையில், நகராட்சிப் பொறியாளா் கோபி, கட்டட ஆய்வாளா் சீனிவாசன், துப்புரவு அலுவலா் ரஹீம், துப்புரவு ஆய்வாளா்கள் முருகன், தேவிபாலா, கணக்காளா் மனோகரன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், நகராட்சிக்குள்பட்ட நகர பகுதிகளில் கடந்த 2 நாள்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ராணிப்பேட்டை ஆா்.ஆா்.சாலையில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாத அரசு டாஸ்மாக் கடைக்கு ரூ. 5,000 அபராதம் விதித்து எச்சரித்தனா். அதேபோல், நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், நகைக் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றப்படுகிா என்றும், முகக் கவசம் அணிந்துள்ளனரா என்றும் சோதனை நடத்தி வருகின்றனா்.