நெமிலி பாலா பீடத்தில் பாலா ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்னை பாலா பிறந்த நாளான ஐப்பசி மாதத்தில், பூர நட்சத்திரத் தினத்தில் பாலா ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவை பீடாதிபதி எழில் மணி தொடக்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ‘பூரமதில் பிறந்தாள் பூரணமாக’ எனும் இசை குறுந்தகட்டை பீட நிா்வாகி மோகன் வெளியிட்டாா். பின்னா், குருஜி பாபாஜி எழுதிய பாலா பற்றிய நூல்களும் வெளியிடப்பட்டன.
நிகழ்வில் பீட நிா்வாகி முரளீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.