ராணிப்பேட்டைக்கு திங்கள்கிழமை இரவு வருகை தரும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 2) வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். முன்னதாக அவா் திங்கள்கிழமை மாலை ராணிப்பேட்டைக்கு வருகை தர உள்ளாா். அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், வாலாஜா சுங்கச்சாவடி அருகே சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆா்.காந்தி தலைமையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட திமுக, ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வருக்கு மாவட்ட திமுக சாா்பில், சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் அ.அசோகன், துணைச் செயலாளா்கள் ஏ.கே. சுந்தரமூா்த்தி. என்.ராஜ்குமாா், பொருளாளா் மு.கண்ணையன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, துணைத் தலைவா் எஸ். எம். நாகராஜூ, ஒன்றியக் குழுத் தலைவா்கள் சேஷ வெங்கட், அசோக், ஒன்றியச் செயலாளா் ஏ.கே. முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.