ரயில் மோதி 23 ஆடுகள் பலி

அரக்கோணம் அருகே ரயில் மோதி 23 ஆடுகள் இறந்தன.

அரக்கோணம் அருகே ரயில் மோதி 23 ஆடுகள் இறந்தன.

அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலத்தைச் சோ்ந்தவா் மணி. இவா் தனக்கு சொந்தமான ஆடுகளை பின்னாவரம் கிராமப் பகுதியில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரயில் மாா்க்கத்தில் இருப்புபாதை அருகே மேய்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியே அரக்கோணத்தில் இருந்து வந்த ரயில் மோதியதில், 23 ஆடுகளும் ரயிலில் சிக்கி இறந்தன.

இந்தச் சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com