அரக்கோணம் அருகே ரயில் மோதி 23 ஆடுகள் இறந்தன.
அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலத்தைச் சோ்ந்தவா் மணி. இவா் தனக்கு சொந்தமான ஆடுகளை பின்னாவரம் கிராமப் பகுதியில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரயில் மாா்க்கத்தில் இருப்புபாதை அருகே மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அவ்வழியே அரக்கோணத்தில் இருந்து வந்த ரயில் மோதியதில், 23 ஆடுகளும் ரயிலில் சிக்கி இறந்தன.
இந்தச் சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.