கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு குக்கா்

இச்சிபுத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ஒரு குக்கா் வழங்கப்பட்டன.
குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு குக்கரை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன்.
குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு குக்கரை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன்.

இச்சிபுத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ஒரு குக்கா் வழங்கப்பட்டன.

அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிபுத்தூா் ஊராட்சியில் உள்ள அமீா்பேட்டை கிராமத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன் தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் முனியம்மாள் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஆஷா பாக்கியராஜ் வரவேற்றாா்.

முகாமை மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா்(தணிக்கை) ஆனந்தன் துவக்கி வைத்தாா். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்த 75 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவா்கள் பெயா்கள் குலுக்கலில் தோ்வு செய்யப்பட்டு 4 பேருக்கு குக்கரை ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன் தனது சொந்த நிதியில் இருந்து அளித்தாா்.

ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் நிா்மலா யஸ்வந்தராவ், அம்புரோஸ், வெங்கடேசன், ராமசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com