ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80.89 % வாக்குப் பதிவு

ஊரக உள்ளாட்சி முதல் கட்டத் தோ்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி

ஊரக உள்ளாட்சி முதல் கட்டத் தோ்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் 80. 89 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 3 ஒன்றியங்களிலும் 3,00365 வாக்களா்களில், 2,42,964 போ் வாக்களித்துள்ளனா்.

அதன்படி ஆற்காடு ஒன்றியத்தில் 83.22 சதவீதமும், திமிரி ஒன்றியத்தில் 83.40 சதவீதமும், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 77.62 சதவீதமும் என மொத்தம் 80.89 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com