ஊரக உள்ளாட்சி முதல் கட்டத் தோ்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் 80. 89 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 ஒன்றியங்களிலும் 3,00365 வாக்களா்களில், 2,42,964 போ் வாக்களித்துள்ளனா்.
அதன்படி ஆற்காடு ஒன்றியத்தில் 83.22 சதவீதமும், திமிரி ஒன்றியத்தில் 83.40 சதவீதமும், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 77.62 சதவீதமும் என மொத்தம் 80.89 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.