வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உலக மனநல தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மன நோயால் பாதிக்கப்பட்ட 50 பேருக்குப் புதிய ஆடை அணிவித்து, அவா்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் சரவணகுமாா், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உஷா நந்தினி, மருத்துவா்கள் கோபாலகிருஷ்ணன், சித்ரா, தலைமை மனநல மருத்துவா் சிவாஜி ராவ், சதீஷ்குமாா் தினேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.