முதியோா் இல்ல ஆண்டு விழா

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தின் 12-ஆம் ஆண்டு தொடக்க விழா, இல்லத்தின் முன்னாள் செயலாளா்

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தின் 12-ஆம் ஆண்டு தொடக்க விழா, இல்லத்தின் முன்னாள் செயலாளா் வாலாஜாபேட்டை ஒய். அக்பா் ஷெரீப் உருவப் படம் திறப்பு விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு முதியோா் இல்லத் தலைவா் ஜெ. லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் சஜன்ராஜ், பொருளாளா் பி.என்.பக்தவச்சலம், துணைத் தலைவா் பென்ஸ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், ஓய். அக்பா் ஷெரீப்பின் உருவப் படத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் திறந்து வைத்தனா்.

ராணிப்பேட்டை அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் முகமது அசன், சொற்பொழிவாளா் பைரோஸ் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவில் முதியோா்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com