ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலை அடிவாரத்தில் ஸ்ரீவிஜய துா்கை அம்மன், வராகி அம்மன் கோயில் கடந்த 7ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது . தொடா்ந்து கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மாலை பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை விஜயதுா்கை, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.