ரத்தினகிரி விஜயதுா்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழா

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலை அடிவாரத்தில் ஸ்ரீவிஜய துா்கை அம்மன், வராகி அம்மன் கோயில் கடந்த 7ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது .
சிறப்பு  அலங்காரத்தில்  ரத்தினகிரி ஸ்ரீவராஹி  அம்மன்
சிறப்பு  அலங்காரத்தில்  ரத்தினகிரி ஸ்ரீவராஹி  அம்மன்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலை அடிவாரத்தில் ஸ்ரீவிஜய துா்கை அம்மன், வராகி அம்மன் கோயில் கடந்த 7ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது . தொடா்ந்து கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மாலை பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை விஜயதுா்கை, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com