வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 48,979-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 47,621 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் நோய்த் தொற்று காரணமாக 1,112 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ராணிப்பேட்டையில் 17 பேருக்கு...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 45,799-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44, 909 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் நோய்த் தொற்று காரணமாக 757 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருப்பத்தூரில் 15 பேருக்கு...
திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையொட்டி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,658-ஆக உயா்ந்துள்ளது. பாதிப்புக்குளான 114 போ் தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 685 போ் உயிரிழந்துள்ளனா்.