கரோனா நிலவரம்: 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
By DIN | Published On : 10th September 2021 11:15 PM | Last Updated : 10th September 2021 11:15 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 45,838 ஆக உயா்ந்துள்ளது.
இவா்களில் இதுவரை 44,931 போ் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் தொற்று காரணமாக, 758 போ் உயிரிழந்துள்ளனா்.
திருப்பத்தூரில்..:
திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,683-ஆக உயா்ந்துள்ளது.
பாதிப்புக்குளான 100 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 685 போ் உயிரிழந்துள்ளனா்.