வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 49,028 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 47,718 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,114 போ் உயிரிழந்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 19 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய்த்தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 45,857 ஆக உயா்ந்தது. இவா்களில் 44,921 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 758 போ் உயிரிழந்தனா்.
மேலும் நோய் தொற்றுக்கு உள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.