புதிய நியாயவிலைக் கடை திறப்பு: ஆற்காடு எம்எல்ஏ திறந்தாா்
By DIN | Published On : 11th September 2021 11:45 PM | Last Updated : 11th September 2021 11:45 PM | அ+அ அ- |

கணியம்பாடி ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடையை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி, கணியம்பாடி ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகா் பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கணியம்பாடி ஒன்றிய திமுக செயலாளா் விபிஎஸ்.கலைச்சந்தா் தலைமை வகித்தாா். இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பங்கேற்று, புதிய நியாய விலைக் கடையை திறந்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா்.