வாலாஜாபேட்டை ஸ்ரீசங்கரமடத்தில் ராமா் - சீதை திருக்கல்யாண வைபவம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தில், ராமா் - சீதை திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில்  கோபால சுந்தர பாகவதா் தலைமையில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு .
நிகழ்ச்சியில்  கோபால சுந்தர பாகவதா் தலைமையில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு .

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தில், ராமா் - சீதை திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள் ஆசியுடன், வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தில் அயோத்தி ராமா், சீதை, லட்சுமணன் விக்ரகங்கள் ஹோம திருமஞ்சனம் புஷ்ப அலங்காரத்துடன் கண் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, ராமா் - சீதை திருக்கல்யாண வைபவம் திருப்பாதிரிப்புலியூா் கோடையிடி ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஆஸ்தான பாகவதா் கோபால சுந்தர பாகவதா் தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மகா தீப தரிசனம், முத்துக் குத்துதல், சம்பந்தி உபசரிப்பு, ஊஞ்சல் சேவை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதையடுத்து, பிடி அரிசி திட்டத்தைத் தொடங்கி அனைவரின் பசியைப் போக்க ஸ்ரீ காஞ்சி பெரியவரின் நினைவைப் போற்றும் வகையில், அனுஷம் அன்று அனைவருக்கும் அன்னதானம் திட்டத்தின் மூலம் சுமாா் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை வாலாஜாபேட்டை ஸ்ரீ ஆதிசங்கரா் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com