அண்ணா சிலைக்கு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் மாலை அணிவித்து மரியாதை

ஆற்காட்டில் உள்ள புதிய வேலூா் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மாலை அணிவித்தாா்.

ஆற்காட்டில் உள்ள புதிய வேலூா் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மாலை அணிவித்தாா். திமுக நகரச் செயலாளா் ஏ.வி.சரவணன், மாவட்டத் துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகர அவைத்தலைவா் பொன்.ராஜசேகா், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் பி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.அன்பழகன்( கிழக்கு) என்.சாரதி (மேற்கு ) ஆகியோா் மாலை அணிவித்தனா். ஒன்றிய அவைத்தலைவா் அரங்கநாதன், துணைச் செயலாளா் எஸ்.ஆா்.சங்கா், மாவட்டப் பிரதிநிதி வி.பாலாஜி, முன்னாள் ஒன்றியச் செயலாளா் சாத்தூா்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அண்ணா சிலைக்கு மதிமுக மாவட்டச் செயலாளா் பி.என். உதயகுமாா், நகரச் செயலாளா் சு.பிரகாசம் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com