ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 4,335 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் எந்தவிதமான இடா்பாடுகளும் இல்லாமல் தங்குதடையின்றி கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொருட்டு, தினம்தோறும் தடுப்பூசி முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டுவருகின்றன.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் ஒரே நாளில் 4,355 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
கிராமங்கள், நகரப் பகுதிகளில் தினந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள கரோனோ தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனதெரிவித்துள்ளாா்.